வெப்பநிலை குறித்து மக்கள் அவதானமாக செயற்படவும் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை !
2024-03-07 08:39
இலங்கைச் செய்திகள்
நாட்டில் அண்மைய காலங்களில் அதிகளவான வெப்பத்தை உணர கூடியதாக இருந்தது. நாளைய தினம் வெப்பநிலையானது மனித உடலில் உணரும் அளவிற்கு காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், அநுராதபுரம், இரத்தினபுரி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய சில மாவட்டங்களிலும் இதனை உணரலாம் என தெரிவித்துள்ளது.